கிளிநொச்சி விவசாயிகளின் கோரிக்கைக்கு இணங்கினார் ஜனாதிபதி

கிளிநொச்சியில் உள்ள விவசாயிகளின் நெல்லை கிலோ ஒன்றுக்கு 100 ரூபாவுக்கு கொள்வனவு செய்வதற்கான பொறிமுறையை அரசாங்கம் ஒரு வாரத்திற்குள் அமுல்படுத்தும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். அதற்கான பொறிமுறையை அடுத்த வாரத்திற்குள் தயார் செய்ய உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.